Posts

கரூரில் மூத்த வழக்கறிஞரை கத்தியால் குத்திய கொலை முயற்சி - சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் மூன்று பேரை கைது செய்த போலீசார்

Image
கரூரில் மூத்த வழக்கறிஞரை கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் பணம், தங்கச் செயின்கள், தங்க காசுகளை கொள்ளையடித்த அவரிடம் பணிபுரிந்த ஜூனியர் வழக்கறிஞர் தனது நண்பர்களுடன் கை வரிசை - சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம் (வயது 71). இவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முந்தினம் இரவு வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் 3 பேர் முகத்தில் மாஸ்க் அணிந்து கத்தியுடன் வீட்டினுள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் வழக்கறிஞர் ஆறுமுகத்தின் முகத்தில் குத்தியும் உள்ளனர்.  அப்போது வழக்கறிஞர் வீட்டில் இருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க செயின்கள், தங்க காசுகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வழக்கறிஞர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை போலீசார...

கரூர் கல்யாண பசுபதிஸ்வர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா

* கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயற்சி விழா.* தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தர் நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. இன்று மாலை ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் . கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அது சமயம் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அது தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் ராகு கேதுக்கு சிறப்பு அலங்காரம் செய்தார். தொடர்ந்து உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு லட்சார்ச்சனை நடைபெற்று தொடர்ச்சியாக ராகு, கேதுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நடைபெற்ற ராகு கேது பெயர்ச்சி விழாவை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கல்லீரல் பாதிக்கப்பட்ட இளம் பெண் மனு.

Image
கரூர் மாவட்டம் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ஜோதி தம்பதியினர்-இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தனது மனைவிக்கு கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு மாதத்திற்குள் ஆபரேஷன் செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும்,  சிகிச்சைக்காக சுமார் 25 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்பதால் கூலி வேலை செய்து அன்றாட உணவுக்கு செலவு செய்வதால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறி மருத்துவ உதவிக்கு நிதி உதவி கேட்டு குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

Image
கரூர் அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம்: தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்: சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம் வெண்ணமலை அருகே உள்ள அன்பு நகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் வேணி மற்றும் சதாசிவம் தம்பதியினரின்  மகன் ராஜசேகர் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எதிர்பாராத விதமாக வீட்டில் உள்ள ஏசியில் இருந்து புகை வந்துள்ளது. அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

க.பரமத்தி அருகே கிரசர் மேடு பகுதியில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.

Image
க.பரமத்தி அருகே கிரசர் மேடு பகுதியில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் தமிழகத்திலேயே அதிக வெப்பம் தாக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. இந்த நிலையில் கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது.  எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து இரும்பு பைப்புகளை  மேலே எடுக்கும் போது மேலே இருந்த  மின் கம்பத்தில் மோதியதில் இயந்திரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிமிந்தப்பட்டி பகுதியைச் சார்ந்த சதீஷ் , முன்னுர் பகுதியைச் சேர்ந்த பாலு ஆகிய இருவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கரூர் மாவட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Image

முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் - மக்கள் நீதி மைய தலைவர், நடிகர் கமலஹாசன் திடீர் சந்திப்பு

Image