க.பரமத்தி அருகே கிரசர் மேடு பகுதியில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.
க.பரமத்தி அருகே கிரசர் மேடு பகுதியில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் தமிழகத்திலேயே அதிக வெப்பம் தாக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. இந்த நிலையில் கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது.
எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து இரும்பு பைப்புகளை மேலே எடுக்கும் போது மேலே இருந்த மின் கம்பத்தில் மோதியதில் இயந்திரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிமிந்தப்பட்டி பகுதியைச் சார்ந்த சதீஷ் , முன்னுர் பகுதியைச் சேர்ந்த பாலு ஆகிய இருவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
Comments
Post a Comment