கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம் மற்றும் அலங்காரம்.

கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம்.





இன்று பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உன்மந்த வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு 





எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எழுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, 







வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு காட்சியளித்த வாராகி அம்மனுக்கு சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.




கரூர் மினி பேருந்து நிலையம் அருகே அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உன்மந்த வாராகி அம்மனுக்கு நடைபெற்ற ஆனி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை 




காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் குங்கும பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.