கரூர் அருகே மளிகை கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என கூறி 52 ஆயிரம் ரூபாயை திருடிய நவீன் குமார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கார்வழி கிராமத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நவீன் குமார் என்பவர் தான் ஒரு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று மளிகைக் கடையை சோதனை
செய்ய வேண்டும் என்று கூறி சோதனை செய்து அதன் பிறகு நீங்கள் மருந்து மாத்திரை எதுவும் விற்கக் கூடாது என்று கூறி சில மாத்திரைகளை குப்பையில் வெளியே போட்டு கடையில் இருந்த ரூபாய் 52 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி அவரது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இது போன்ற தவறுகள் எதுவும் செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர் பொன்னுசாமியை எச்சரிக்கை செய்து அவர் வந்த இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று விட்டார்.
Comments
Post a Comment