கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி போலீசாரின் சோதனை நிறைவு.
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி போலீசாரின் சோதனை நிறைவு.
திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடத்திய விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டனர்.
மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ், தோட்டக்குறிச்சியில் உள்ள பேரூர் கழக அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ், கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகிய 3 பேர் வீடுகளில் சோதனை நடந்தது.
Comments
Post a Comment