Posts

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.

Image
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பில் பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை. கிறிஸ்த்தவ மக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின் இன்று கரூர் தலைமை தபால் அலுவலகத்தில், டெல்லியில் உள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு ஒன்றை பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தார் . அந்த மனுவில், கரூர் மாவட்டத்தில் மக்களின் நல்ல மதிப்பை பெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரிமையியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கினை ரத்து செய்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பசுபதீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி

Image
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ அலங்காரவல்லி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 63 நாயன்மார்கள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு 63 நாயன்மார்களுக்கு, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று  அதன் தொடர்ச்சியாக உற்சவர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதிசுவரர் சுவாமிக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் 63 நாயன்மார்களுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் உற்சவர் ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிகளுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து திருமண கோலத்தில் ஆலய மண்டபத்தில் கொலுவிருக்க செய்தனர். மேள தாளங்கள் முழங்க தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர். தொடர்ந்து யாக வேள்விக்கும் 63 நாயன்மார் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாய்க்கும் மகா தீபாராதனை காட்ட...

விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவையானது தற்காலிகமாக ரத்து

 கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் தாழ்வின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலின் நீர்மட்டம் தன்மையைப் பொறுத்து காலை 11.30 மணியளவில் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று உப்பிடமங்கலம் பகுதியில் மின்தடை

Image
 

தேசிய உறவினர் தின நல்வாழ்த்துக்கள்

Image
 

Mayanur Barrage

 Mayanur Barrage  24.07.2024 /6.00 AM Level 3.69 m  (5.1m) Storage: 383.91 Mcft  Inflow:  Cauvery River: 1101 Cusecs  Out flow:  Cauvery.       : 362 Cusecs  Total   : 362 Cusecs

கரூரில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா - செருப்பை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்திய த.வெ.க தொண்டர்கள்.

Image
கரூரில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் - செருப்பை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்திய த.வெ.க தொண்டர்கள். தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள  கர்மவீரர் காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, நாடார் ஐக்கிய சங்கம், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செருப்புகளை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்தினர். மேலும், கர்மவீரர் காமராஜர் புகழ் ஓங்குக! த.வெ.க தலைவர் தளபதி விஜய் புகழ் ஓங்குக! என்று கோஷமிட்டனர்.