Posts

Showing posts from July, 2024

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.

Image
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பில் பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை. கிறிஸ்த்தவ மக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின் இன்று கரூர் தலைமை தபால் அலுவலகத்தில், டெல்லியில் உள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு ஒன்றை பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தார் . அந்த மனுவில், கரூர் மாவட்டத்தில் மக்களின் நல்ல மதிப்பை பெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரிமையியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கினை ரத்து செய்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பசுபதீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி

Image
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ அலங்காரவல்லி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 63 நாயன்மார்கள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு 63 நாயன்மார்களுக்கு, 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று  அதன் தொடர்ச்சியாக உற்சவர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதிசுவரர் சுவாமிக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் 63 நாயன்மார்களுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் உற்சவர் ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிகளுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து திருமண கோலத்தில் ஆலய மண்டபத்தில் கொலுவிருக்க செய்தனர். மேள தாளங்கள் முழங்க தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர். தொடர்ந்து யாக வேள்விக்கும் 63 நாயன்மார் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாய்க்கும் மகா தீபாராதனை காட்ட...

விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவையானது தற்காலிகமாக ரத்து

 கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் தாழ்வின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலின் நீர்மட்டம் தன்மையைப் பொறுத்து காலை 11.30 மணியளவில் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று உப்பிடமங்கலம் பகுதியில் மின்தடை

Image
 

தேசிய உறவினர் தின நல்வாழ்த்துக்கள்

Image
 

Mayanur Barrage

 Mayanur Barrage  24.07.2024 /6.00 AM Level 3.69 m  (5.1m) Storage: 383.91 Mcft  Inflow:  Cauvery River: 1101 Cusecs  Out flow:  Cauvery.       : 362 Cusecs  Total   : 362 Cusecs

கரூரில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா - செருப்பை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்திய த.வெ.க தொண்டர்கள்.

Image
கரூரில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் - செருப்பை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்திய த.வெ.க தொண்டர்கள். தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள  கர்மவீரர் காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, நாடார் ஐக்கிய சங்கம், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செருப்புகளை கழற்றி வைத்துவிட்டு, பயபக்தியுடன் மரியாதை செலுத்தினர். மேலும், கர்மவீரர் காமராஜர் புகழ் ஓங்குக! த.வெ.க தலைவர் தளபதி விஜய் புகழ் ஓங்குக! என்று கோஷமிட்டனர்.

கரூரில் அமராவதி ஆற்றங்கரையில் கூட்டாளிகளுடன் மது அருந்திய நபர் தலையில் கல்லை போட்டு கொலை.

Image
கரூர், மண்டிக்கடை அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மண்டிக்கடையில் இருந்து சுக்காலியூரை இணைக்கும் அமராவதி ஆற்றங்கரையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் கொட்டகை அமைத்து மணல் மாட்டு வண்டி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் முருகவேல் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் அருகில் உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கி வந்து கொட்டகையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து கொட்டகை அருகிலேயே அமராவதி ஆற்றங்கரையில் முருகவேல் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டு, கரூர் நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கரூர் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

Image
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை  காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,23,689 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.  இந்த நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் மாவட்ட திமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி இடைத்தேர்தல் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். கரூர் மாநகர திமுக செயலாளர் எஸ்.பி கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை மேயர் தாரணி சரவணன், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குளித்தலை கும்பாபிஷேக விழாவில் பிளக்ஸ் பேனர் தொடர்பான பிரச்சனையில் இளைஞர்கள் தடியடி தாக்குதல்.

Image
கரூர் மாவட்டம்,  குளித்தலை அருகே பொய்யாமணி கிராமம் அம்பேத்கார் நகரில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.  கும்பாபிஷேகத்திற்காக அந்த பகுதியில்  இளைஞர்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தினர் பிளக்ஸ் பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் ஊர் முக்கியஸ்தர்கள் நிர்வாகிகள் முடிவெடுத்து இனிமேல் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். பிரச்சனைகளை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். 

கரூர் அருகே மளிகை கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என கூறி 52 ஆயிரம் ரூபாயை திருடிய நவீன் குமார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கார்வழி கிராமத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நவீன் குமார் என்பவர் தான் ஒரு  உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று மளிகைக் கடையை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி சோதனை செய்து அதன் பிறகு நீங்கள் மருந்து மாத்திரை எதுவும் விற்கக் கூடாது என்று கூறி சில மாத்திரைகளை குப்பையில் வெளியே போட்டு கடையில் இருந்த ரூபாய் 52 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி அவரது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இது போன்ற தவறுகள் எதுவும் செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்  பொன்னுசாமியை எச்சரிக்கை செய்து அவர் வந்த இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று விட்டார்.

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஒரு வாரத்திற்குள் 2வது முறையாக பயங்கர தீ விபத்து.

கரூர் 5 ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.

கரூர் அருகே நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாதிரி லோக்சபா தேர்தலில் பூத் ஸ்லிப் வழங்கப்பட்டு எலக்ட்ரானிக் மெஷினில் மாணவர்கள் வாக்கு செலுத்தினர்.

கரூரை அடுத்த மணவாடி பகுதியில் உள்ள (லிட்டில் பிளவர்) தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகையில், மாதிரி லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு பொறுப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, முதலாம் ஆண்டாக நடந்த தேர்தலில், மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வாக்களித்தனர்.  முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பூத் ஸ்லிப் கொடுத்து பள்ளி வளாகத்தில் வரிசையாக நின்று கைவிரல்களில் மை வைத்து, மாதிரி எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷினில் வேட்பாளர்கள் நிற்கும் பல்வேறு சின்னங்களில் தாங்கள் விரும்பியவர்களுக்கு தங்களது வாக்கினை செலுத்தினர்.

கரூரில் சாலையோர பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு - சுகாதாரமில்லாத உணவுப் பொருட்களை பினாயில் ஊற்றி அளித்தனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பானி பூரி கடைகள் சாலையோரங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்யக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பானி பூரியை பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் அதிகமாக சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் பானி பூரி கடைகளில் விற்பனை செய்யக்கூடிய உணவு பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கரூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சாலையோரமாக விற்கப்படும் பானி பூரி கடைகளில் இன்று திடீர் சோதனையில் இறங்கினர். 

அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டி தரக்கோரி மாற்றுத்திறனாளி வழங்கிய 30-க்கும் மேற்பட்ட மனுக்களை மாலையாக அணிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு.

கரூர், வெங்கமேடு அருகே அமைந்துள்ள அண்ணா சாலை மெயின் ரோடு பகுதியில் மாற்றுத்திறனாளி பாபு. மனைவி தீபாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். பாபுவிற்கு இரண்டு கால்கள் செயலிழந்து இருப்பதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. மனைவி கூலி வேலை பார்த்து வருவதால் குடும்பத்தை சமாளிக்க முடியாத நிலை இருப்பதாகவும், இதனால் அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டித் தரக் கோரி 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கியும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி போலீசாரின் சோதனை நிறைவு.

Image
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி போலீசாரின் சோதனை நிறைவு. திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடத்திய  விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டனர். மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ், தோட்டக்குறிச்சியில் உள்ள பேரூர் கழக அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ், கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகிய 3 பேர் வீடுகளில் சோதனை நடந்தது.

இன்று (05.07.2024) கரூரில் என்ன நடக்கப்போவது தெரியுமா ?

Image
  இன்று (05.07.2024) கரூரில் என்ன நடக்கப்போவது தெரியுமா ?

தேசிய மாற்று அறுவை சிகிச்சை தின நாள்

Image
 தேசிய மாற்று அறுவை சிகிச்சை தின நாள்

கரூர் அருகே வடமாநில பெண் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு படுகொலை

Image
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த கொங்குநகரில் முருகையன் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது பால் பண்ணைக்கு உதவியாளர் பணிக்கு ஆள் வேண்டும் என கேட்ட போது,  நடையனூரில் வசிக்கும் வடமாநில ஏஜெண்ட் மூலம் பீகாரை சார்ந்த சாந்த்மதி தேவி என்ற பெண்ணும் அவருடைய கணவர் மற்றும் தம்பி என்பவருடன் கடந்த 1 ம் தேதி வேலைக்கு சேர்ந்து பால் பண்ணையிலேயே தங்கி இருந்துள்ளனர்.   இன்று அதிகாலை 4 மணியளவில் அவர்கள் தங்கி இருந்த இடத்தில் அந்தப் பெண்ணின் கணவர் அப்பெண்ணை அடித்தாக கூறி அவரது தம்பி அருகில் தங்கி வேலை பார்க்கும் தமிழ்நாட்டை சார்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். தகவலறிந்து பால்பண்ணை உரிமையாளர் மற்றும் அருகில் இருப்பவர்கள் அங்கு சென்று பார்த்த போது அப்பெண்ணின் உடல் கிடந்துள்ளது, அவரது கணவர் மாயமாகி இருந்தார். இது தொடர்பாக பால் பண்ணையின் உரிமையாளர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அருள்மிகு பண்டரிநாதன் திருக்கோயில் ஆசாட ஏகாதேசி திருவிழா.

Image
அருள்மிகு பண்டரிநாதன் திருக்கோயில் ஆசாட ஏகாதேசி திருவிழா அழைப்பிதழ்  அன்புடையீர் வருகின்ற 17.07.2024 புதன்கிழமை காலை 6 மணிக்கு பண்டரிநாதனுக்கு, ரகமாய் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அதை தொடர்ந்து பக்தர்கள் பகவானை தொட்டு தரிசிக்க அனுமதிப்பார்கள்.

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான 101 கடைகள் சுமார் 6 கோடிக்கு மேல் கரூர் மாநகராட்சி வாடகை நிலுவை ?

Image
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான 101 கடைகள் லட்சக்கணக்கில் வாடகை நிலுவை - பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 32 கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 6 கோடிக்கு மேல் கரூர் மாநகராட்சி வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கியும் நிலுவை தொகை செலுத்தாத காரணத்தால் காவல்துறை பாதுகாப்புடன் சீல் வைக்கும் பணி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

கரூரில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருக்கு டவுன் இன்ஸ்பெக்டர் போலீஸ் ஜீப் கதவினை திறந்து கைகுலுக்கி வாழ்த்தி வழி அனுப்பி வைத்த வீடியோ.

Image
கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பழனிவேல். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். விழாவில் ஏட்டு பழனிவேலுவுக்கு ஆய்வாளர் மணிவண்ணன், எவர்கிரீன் பவுண்டேஷன் சேர்மன்  ஸ்காட் தங்கவேல், உதவி ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்ட சக போலீசார் வாழ்த்தி பேசி நினைவு பரிசுகளை வழங்கினர்.  குடும்பத்துடன் பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு வருகை தந்த தலைமை காவலரை, காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அவரது கைகளை பிடித்து அழைத்து வந்து, தனது போலீஸ் ஜீப்பில் கார் கதவை திறந்து அவரை முன் இருக்கையில் அமர வைத்து கைகுலுக்கி வாழ்த்தி வழி அனுப்பினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் இடைக்கால முன் ஜாமின் மனு ?

Image
அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் இடைக்கால முன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  கரூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் நாளை உத்தரவு வழங்குவதாக ஒத்திவைத்தார். ஏற்கனவே, முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் மனு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2026ல் அண்ணாமலை முதலமைச்சர் ஆவார்- தேனி கூடலூரை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் கரூரில் பேட்டி.

Image
 2026ல் திமுக, அதிமுகவை தவிர்த்து பாஜக சிறு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும். ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அண்ணாமலை முதலமைச்சர் ஆவார்.எனக் கூறி கரூரில் யாகம் செய்வதற்காக இடம் தேர்வு செய்ய வந்ததாக தேனி கூடலூரை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி. அதிமுக, திமுகவை சார்ந்த முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி, 2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - பிரதமர் மோடி இன்னும் 10 ஆண்டுகள் பிரதமராக இருக்க வேண்டும் எனக் கூறி கரூரில் யாகம் செய்வதற்காக இடம் தேர்வு செய்ய வந்ததாக தேனி கூடலூரை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி.

கரூரில் 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் ஆள் மாறாட்டம் .

Image
கரூரில் 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் ஆள் மாறாட்டம் - ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனை ஆசிரியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கில மொழி பாடத்திற்கான துணைத் தேர்வை 150 பேர் எழுதினர். இந்த மையத்தில்  பகுதியை சேர்ந்த மாணவருக்கு பதிலாக வேறு சிறுவன் ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியது கண்டுபிடிப்பு. ஆள் மாராட்டத்தில் ஈடுபட்டு துணைத் தேர்வு எழுதிய சிறுவனை ஆசிரியர்கள் பிடித்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.